திங்கள், 29 டிசம்பர், 2008

நீச்சல் உடையில் வந்த நமீதா !.





அஜீத்குமார், நயன்தாரா, நமீதா நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் வெளிவந்த `பில்லா' படம், இப்போது தெலுங்கில் அதே பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தை குணசேகர் டைரக்டு செய்கிறார்.

அஜீத்குமார் நடித்த வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். நயன்தாரா நடித்த வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். நமீதா நடித்த வேடத்தில் அவரே நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அதையடுத்து விசாகப்பட்டினத்தில் இப்போது படப்பிடிப்பு நடைபெறுகிறது.
நமீதா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன. அவர் நீச்சல் உடையில் வரும் காட்சிகள் மட்டும் தொடர்ந்து 5 நாட்கள் படமாக்கப்பட்டன.

நீச்சல் உடையில் நமீதா வருவதை படப்பிடிப்பு குழுவினரே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். நீச்சல் உடையில் அவர் கவர்ச்சியாக நடந்து வருவதையும், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி உட்கார்ந்திருப்பதையும், கண்கொட்டாமல் பார்த்தார்கள்.

இதை கவனித்த நமீதா, படப்பிடிப்பு குழுவினர் வேடிக்கை பார்ப்பதை எப்படி தவிர்க்கலாம்? என்று யோசிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்பில் பணிபுரியும் ஆண்கள் தன்னை பார்த்து ரசிக்கவும் கூடாது... அதே சமயம் அவர்கள் மனம் புண்படும்படியும் நடந்துகொள்ளக்கூடாது...அதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதன்படி, நீச்சல் உடை அணிந்து கொண்டு காமிராவை நோக்கி அவர் வரும்போதெல்லாம், ``அண்ணா, எல்லோரும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்'' என்று தெலுங்கில் தமாசாக சொன்னார். உடனே படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டார்கள். நமீதாவின் சங்கோஜத்தை புரிந்து கொண்டு அவரை வேடிக்கை பார்ப்பதை தவிர்த்தார்கள்.

நமீதா சம்பந்தப்பட்ட நீச்சல் உடை காட்சிகளை படமாக்கி முடித்தபின், அனுஷ்கா நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகளை படமாக்க ஆரம்பித்தார்கள்.

படப்பிடிப்பு குழுவினர், ``நமக்கு இன்று டபுள் பேட்டா'' என்று தங்களுக்குள் தமாசாக சொல்லிக்கொண்டார்கள்.

சனி, 27 டிசம்பர், 2008

பிரசாந்த் - மீராஜாஸ்மின் ஜோடியுடன் மீண்டும் மலையூர் மம்பட்டியான்





நடிகர் தியாகராஜன் நடித்து வெற்றி பெற்ற `மலையூர் மம்பட்டியான்' படம், `மம்பட்டியான்' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது.

தியாகராஜன் நடித்த மம்பட்டியான் வேடத்தில், பிரசாந்த் நடிக்கிறார். சரிதா நடித்த வேடத்தில், பிரசாந்த் ஜோடியாக மீராஜாஸ்மின் நடிக்கிறார். ஜெயமாலினி நடித்த வேடத்தில், முமைத்கான் நடிக்கிறார். ஜெய்சங்கர் நடித்த டி.எஸ்.பி. ரஞ்சித் வேடத்தில், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். `சின்ன பண்ணை சீனாதானா'வாக வடிவேல் நடிக்கிறார்.

போலி மம்பட்டியானாக கலாபவன்மணி நடிக்க, ராஜேஷ், கோட்டா சீனிவாசராவ், விஜய குமார், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, சங்கராபரணம் ராஜலட்சுமி, கலைராணி, `மானாட மயிலாட' புகழ் கணேஷ் ஆர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரனின் மகன் அருண் ராஜேந்திரன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், கலை, டைரக்ஷன் பொறுப்புகளை தியாகராஜன் ஏற்றுள்ளார். லட்சுமி ஷாந்தி மூவீஸ் சார்பில் படத்தை தியாகராஜனே தயாரிக்கிறார்.

அழகிய மலைபிரதேசங்களும், அடர்ந்த காடுகளும் நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

டைரக்டர் ஷங்கர் தயாரிக்கும் புதிய படம், `ஈரம்'


காதல், வெயில், இம்சை அரசன் என மாறுபட்ட கதையம்சங்களை தயாரித்த பட நிறு வனம், டைரக்டர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட கதையம் சம் கொண்ட `ஈரம்' என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது.

இதில், `மிருகம்' பட கதாநாயகன் ஆதி, நந்தா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கி றார்கள். இவர்களுக்கு ஜோடியாக சிந்துமேனன், சரண்யா மோகன் ஆகிய இருவரும் நடிக்க, மற்ற நடிகர்-நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு, படப் பிடிப்பு நடைபெறுகிறது.

முதல்கட்டமாக, அடுக்கு மாடி குடியிருப்பு போன்ற பிரமாண்டமான அரங்கம் அமைக் கப்பட்டு, அதில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இதையடுத்து திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது.

முழுக்க முழுக்க கதை, கதாபாத்திரங்கள், தொழில்நுட்பம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படம் இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டு செய் கிரார், அறிவழகன். இவர், டைரக்டர் ஷங்கரிடம் `பாய்ஸ்,' `அந்நியன்' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, சிறந்த குறும் படத்தை இயக்கியதற்காக தங்கப்பதக்கம் பெற்றவர்.

இந்த படத்தை ஏப்ரல் இறுதியில் திரைக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டு இருக்கி றார்கள்.

வியாழன், 25 டிசம்பர், 2008

காட்பாடியில் `எந்திரன்' படப்பிடிப்பு!. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடித்தனர்




காட்பாடி, டிச.26-

நடிகர் ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு வேலூரை அடுத்த காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கும் எந்திரன் படத்தை டைரக்டர் ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்தது.

இந்த படத்தின் சில காட்சிகளை படம் பிடிப்பதற்காக டைரக்டர் ஷங்கர் தலைமையிலான படக்குழுவினர் நேற்று அதிகாலை வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்குள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினர். இதை தொடர்ந்து, நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தும், நடிகை ஐஸ்வர்யாராயும் தனி தனிக்கார்களில் வேலூர் வந்தனர். பின்னர், அவர்கள் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


நேற்று காலை டெக்னாலஜி டவரில் படிப்பிடிப்பு நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர். படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் ஆகியோர் வேலூர் வருகை தந்துள்ளது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ரஜினியை காண ரசிகர்களும், பொது மக்களும் பெருமளவில் திரண்டு விட்டால் படப்பிடிப்புக்கு இடைïறு ஏற்படுவதுடன், போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் வரும் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

செவ்வாய், 23 டிசம்பர், 2008

கிசு கிசு!.,கிசு கிசு!.,கிசு கிசு!.. .





கல்யாணத்தில் இணையும் ஜோடி!

`விஷ்' என்று உச்சத்துக்குப்போன மூன்றெழுத்து கதாநாயகனுக்கும், `நம்பர்-1' நீயா, நானா? என்ற போட்டியில் உள்ள மூன்றெழுத்து நடிகைக்கும் இடையே அரும்பிய காதல் கனிந்து, கல்யாணத்தில் முடியும் நிலையில் உள்ளது.
இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கும் படம் திரைக்கு வந்ததும், திருமண பத்திரிகை கொடுக்க இருக்கிறார்களாம்!


`கல்லூரி' நாயகி சம்பளம், ரூ.60 லட்சம்!

`நயன' நடிகை நடிக்க இருந்த படத்தில் `கல்லூரி' நாயகி நடிக்கிறார் அல்லவா? இந்த படத்துக்காக `கல்லூரி' நாயகிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம், ரூ.60 லட்சமாம்! இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அடுத்த படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்க முடிவு செய்து இருக்கிறாராம், `கல்லூரி' நாயகி!


`ராய்' நடிகையின் சினேகிதர்கள்!

`ராய்' நடிகைக்கு `விளையாட்டு' நண்பர் தவிர, இன்னொரு நண்பரும் இருக்கிறார். அவர் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர். `ராய்'க்கு விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை பரிசாக கொடுப்பவர், அந்த வெளிநாட்டு நண்பர்தான். சமீபத்தில் அவர் கொடுத்த பரிசு கார்.

ஒரு நடிகையின் காதல் விளையாட்டு!

இளம் டைரக்டர்களின் மனதில் காதல் ஆசையை தூண்டிவிட்டு, பிறகு ஏமாற்றி அவர்களை தாடி வளர்க்க வைத்து பார்த்து ரசிப்பதை, `மோ...கா' என்ற நடிகை பொழுதுபோக்காக வைத்து இருக்கிறார். இவருடைய காதல் விளையாட்டில் சிக்கி, சின்னாபின்னமாகிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதாம்!

திங்கள், 22 டிசம்பர், 2008

"அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுப்பதில் தகராறு" - நடிகை நயன்தாரா-பட அதிபர் மோதல்!.







சென்னை, டிச.23-

`பையா' என்ற படத்தின் அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுப்பது தொடர்பாக நடிகை நயன்தாராவுக்கும்- பட அதிபருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரண்டும் பேரும் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்திருக்கிறார்கள்.


நயன்தாரா - கார்த்தி ஜோடியாக நடிக்க, லிங்குசாமி டைரக்ஷனில் `பையா' என்ற படம் தயாராவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை டைரக்டர் லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பதாக இருந்தார்.

இந்த படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. இந்த நிலையில், நயன்தாரா சம்பளத்தை குறைத்தால்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை ஏற்க நயன்தாரா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பட அதிபர் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், `பையா' படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா ரூ.15 லட்சம் `அட்வான்ஸ்' வாங்கியிருந்தார். இப்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை. என்றாலும் அவர் அட்வான்ஸ் தொகையை திருப்பி தரவில்லை. அவரிடமிருந்து அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து நடிகை நயன்தாரா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

`பையா' படத்தில் நடிப்பதற்காக நான் மூன்று மாதங்களாக காத்திருந்தேன். அந்த சமயத்தில் பட அதிபர் சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில், சம்பளத்தை குறைத்தால்தான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்று அவர் என்னை `பிளாக்மெயில்' செய்தார்.

நான் மூன்று மாதங்களாக காத்திருந்ததால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் எனக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டது. எனக்கு நஷ்டஈடு கொடுத்தால் நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விடுகிறேன்.

இவ்வாறு நயன்தாரா அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த இரண்டு புகார்களின் மீதும் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

"காந்தி'' பட டைரக்டர் ஆட்டன்பரோ உடல் நிலை கவலைக்கிடம்!.




லண்டன், டிச.22-

காந்தி பற்றிய படம் எடுத்த டைரக்டர் லார்டு ரிச்சர்டு ஆட்டன்பாரோ, தன் வீட்டில் கடந்த வாரம் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டதால் அவர் சுயநினைவு இழந்தார். அவர் கோமாவில் விழுந்தார். உடனடியாக அவர் தென்மேற்கு லண்டனில் உள்ள புனித ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இவர் கடந்த 1982-ம் ஆண்டு இயக்கிய காந்தி படத்துக்காக சிறந்த படம் மற்றும் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.

அவர் நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். நடிகராகவும், டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து இருக்கிறார். இப்போது அவருக்கு வயது 85 ஆகும்.

சனி, 20 டிசம்பர், 2008

ஜோதிர்மயி நடித்த ‘அடையாளங்கள்’ படத்துக்கு விருது!.






சென்னை, டிச.21:
ஜோதிர்மயி நடித்த மலையாள படத்துக்கு ஆசிய விருது கிடைத்துள்ளது.

ஜோதிர்மயி மலையாளத்தில் நடித்த படம் ‘அடையாளங்கள்’. இதை எம்.ஜி.சசி இயக்கி இருந்தார். 1940 களில் வாழ்ந்த மலையாள எழுத்தாளர் ஒருவரின் கதை இது.

அவரது காதலியாக ஜோதிர்மயி நடித்திருந்தார். இந்த படத்துக்கு திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் ‘நெட் பேக்’ என்ற ஆசிய விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஜோதிர்மயி கூறும்போது, ‘இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். 75 ஆண்டுக்கு முன் ஒரு மலையாளப் பெண் எப்படி இருந்திருப்பாள் என்பதை உணர்ந்து நடித்த படம். இந்த படத்தில் நான் மட்டும்தான் பழைய முகம். ஹீரோ உட்பட அனைவரும் புதுமுகம்’ என்றார்.

வெள்ளி, 19 டிசம்பர், 2008

`குமரிப்பெண்ணின் உள்ளத்திலே' - பெயரில் ஒரு புதிய படம்.!.



எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்து பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், `குமரிப்பெண்ணின் உள்ளத்திலே.' நீண்ட பல வருடங்களுக்குப்பின் இதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது.

பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் காதலிக்கிறார்கள். அதே ஊரில் உள்ள ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த மாணவியை அடைய துடிக்கிறார். இதனால் ஏற்படும் சிக்கல்களை கதை சித்தரிக்கிறது.

புதுமுகங்கள் சந்துரு-சிப்பி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் மீராவாசுதேவன், சீதா, நாசர், பொன்னம்பலம், செந்தில், குமரிமுத்து, முத்துக்காளை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்வதுடன், போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார், கிஷோர். விசாக் மூவீஸ் சார்பில் கிரிஜா, ஆகாஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது.

வியாழன், 18 டிசம்பர், 2008

"அம்முவாகிய நான்" பட நாயகி நடிகை பாரதி மீது மானேஜர் புகார்!.







சென்னை, டிச.19-

`அம்முவாகிய நான்' படத்தின் கதாநாயகி நடிகை பாரதி மீது, அவரது மானேஜர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான `அம்முவாகிய நான்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாரதி. இவர், `நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற படத்திலும் நடித்துள்ளார். `சற்று முன் கிடைத்த தகவல்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவர்மீது, இவரது மானேஜர் வேல்ராஜா (வயது 32) என்பவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


நான் நடிகை பாரதியிடம் மானேஜராக பணிபுரிந்து வருகிறேன். சினிமா பைனான்சியர் தணிகைவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். எனது திருமணத்துக்காக தணிகைவேலிடம் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கினேன். அந்த கடனை திருப்பி கேட்டு தணிகைவேல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை பாரதியும், தணிகைவேலுவும் திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகைகளில் `கிசு கிசு' செய்திகள் வந்தன. இந்த செய்தியை நான் தான் வெளியில் சொல்லுவதாக என் மீது இருவரும் சந்தேகப்பட்டனர்.

இந்த நிலையில், எனது வீட்டுக்கு வந்த ஒருவர் பாரதி அழைப்பதாக கூறி என்னை காரில் அழைத்து சென்றார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதும் பாரதியுடன் சேர்ந்து அங்கிருந்த 5 பேர் என்னை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார்கள். `செத்துப்போடா' என்று கூறி எனது கழுத்தையும் நெரித்தனர். அப்போது தணிகைவேலும் உடன் இருந்தார்.

பின்னர் இரவு 12 மணிக்கு எனது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு சென்றுவிட்டனர். இதன்பிறகு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.

போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று என்னை மிரட்டினார்கள். எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி வருகிறார். இதே புகார் மனு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

புதன், 17 டிசம்பர், 2008

தேஜாஸ்ரீ நடத்தும் "கதக் நடன நிகழ்ச்சி".





மும்பையில் வசிக்கும் தேஜாஸ்ரீயின் தந்தை கேலே, பிரபல கதக் கலைஞர். அவரும், தேஜாஸ்ரீ யும் இணைந்து துபாயில் கதக் நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

பத்தொன்பதாம் தேதி நடக்கும் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த், சங்கீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

செவ்வாய், 16 டிசம்பர், 2008

"சரோஜாதேவியுடன் நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது'' ரஜினிகாந்த் ருசிகர பேச்சு






சென்னை, டிச.17-

சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.


நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

விழாவில் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ், நடிகை சரோஜாதேவி, எஸ்.என்.லட்சுமி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர் கிருஷ்ணசாமி, விளையாட்டு வீராங்கனை சிறுமி விஜயலட்சுமி உள்பட பலர் சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சரோஜாதேவிக்கு விருது வழங்கி பேசியதாவது:-


சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை அந்த நேரத்தில் நான் ஹீரோவாக நடித்தால் கூட, அப்போது திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் என்னை நெருங்க விட்டு இருக்க மாட்டார்கள்.

சரோஜாதேவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

"நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது"- தமன்னா.











சென்னை, டிச.15:




"லிங்குசாமி படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது" என்றார் தமன்னா.
லிங்குசாமியின் "பையா" படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்தார். அதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டது. திடீரென்று சம்பளத்தை குறைக்கச் சொல்லி லிங்குசாமி தரப்பில் கேட்கப்பட்டது.
அதை ஏற்காமல் படத்திலிருந்து விலகினார் நயன்தாரா. இதையடுத்து தமன்னா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதுபற்றி தமன்னாவிடம் கேட்டபோது, "இதுவரை இப்படத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது. படத்திலிருந்து ஹீரோயின் விலகுகிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். எனக்கு மற்றவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஏற்ற வேடங்களில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டி போடுகிறேன்" என்றார்.

செவ்வாய், 9 டிசம்பர், 2008

பட அதிபரிடம் `கேரவன்' கேட்டு தகராறு செய்த கதாநாயகன்


"சினிமா படப்பிடிப்பின்போது `கேரவன்' கேட்டு பட அதிபரிடம் ஒரு புது கதாநாயகன் தகராறு செய்தார்.
`வைகை' என்ற புதிய படத்தில், பாலா என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர், `மானாட மயிலாட' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றவர். இவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்து, `வைகை' படத்தில் நடிக்க வைத்தார்கள்.
படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் வரை அமைதியாக நடித்து வந்த பாலா, தனக்கு `கேரவன்' வேண்டும் என்று பட அதிபரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தார்.
பட அதிபர் குமரன் உடனே ஒரு கேரவனுக்கு ஏற்பாடு செய்தார். கேரவன் வந்தபின், ``என்னை தவிர வேறு யாரும் அந்த கேரவனை பயன்படுத்தக்கூடாது'' என்று பாலா கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது
.

இதனால் தயாரிப்பாளர் குமரனுக்கும், கதாநாயகன் பாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ``நான் இந்த படத்தில் நடிக்க முடியாது'' என்று சொல்லிவிட்டு, பாலா சென்னை திரும்ப முயற்சித்தார்.
இதுபற்றி பட அதிபர் குமரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் பாலாவிடம் விசாரணை நடத்தினார்கள். ``எந்த காரணம் கொண்டும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறக் கூடாது. படத்தை சுமூகமாக முடித்து கொடுத்த பிறகுதான் சென்னைக்கு வரவேண்டும்'' என்று பாலாவிடம் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து பாலா, நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பட அதிபர் குமரன் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார். அவரை நடிகர் சங்க நிர்வாகிகள் சமாதானப்படுத்தி, `வைகை' படத்தில் நடித்து முடிக்கும்படி அறிவுரை வழங்கினார்கள்.

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

மும்பை ஓட்டல் ஊழியர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்த நடிகை





மும்பையின் கவர்ச்சி தாரகை ராக்கி சவந்த். எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அரைகுறை ஆடையில் சென்று அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் இவர் அதை பற்றி கண்டு கொள்வதில்லை.
இவர் சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். கௌபாணி வகை பேண்ட், டைட்டான சட்டை அணிந்து சென்ற இவரை நேரில் கண்ட இன்ப அதிர்ச்சியில் ஓட்டல் ஊழியர்களுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ராக்கியை விழுந்து விழுந்து கவனித்துள்ளனர். அப்போது ஒரு ஊழியர் மட்டும் ஆர்வ மிகுதியில் ராக்கியை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதைக்கண்ட ராக்கிசவந்த் அவர் அருகில் சென்று என்னை மட்டும் ஏன் போட்டோ எடுக்கிறீர்கள்? நாம் இருவருமே சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாமே என கூறியதோடு அந்த ஊழியரின் தோளில் தனது கையை போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம்.
இதைப்பார்த்த மற்ற ஊழியர்கள் ராக்கியிடம் நாங்களும் உங்களுடன் சென்று போட்டோ எடுக்க ஆசைப்படுகிறோம் என கூறியுள்ளனர்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வரிசையாக ஒவவொருவருடன் நின்று தோளில் கை போட்டபடி மட்டுமல்லாமல் கட்டி அணைத்தபடி, முத்தம் கொடுத்தபடி என விதவிதமாக கவர்ச்சியாக போஸ் கொடுத்தாராம் ராக்கி.
ஒட்டு மொத்தத்தில் அன்றைய தினம் ஓட்டலுக்கு விருந்துக்கு சென்ற ராக்கி சவந்த் ஓட்டல் ஊழியர்களுக்கு கவர்ச்சி படைத்து கலக்கினாராம்.